search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி விவசாயி பலி"

    திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    காட்டுப்புத்தூர்:

    திருச்சி மாவட்டம் தொட் டியம்  அருகே உள்ள கூண்டு ரங்கம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). வாழை விவசாயியான இவர் வாழைத்தார் வியாபாரமும் செய்து வந்தார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக வாழைத்தார்களை ஏற்றிக் கொண்டு கூண்டு ரங்கம்பட்டியில் இருந்து தொட்டியத்திற்கு சென்றார்.

    தொட்டியம் மாதா பள்ளி அருகே திருச்சி-நாமக்கல் சாலையில் செல்லும்போது திடீரென சாலையில் திரும்ப முயன்றார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பலத்த காயமடைந்தார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.
     
    இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி கார் டிரைவர் திருச்சி வாத்தலை கரியமாணிக்கத்தை சேர்ந்த விமல்ராஜ்  (32) என்பவரை கைது செய்தனர்.
    சிறுகனூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உடல் நகுங்கி பலியானார்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் சிறுகனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). விவசாயி. இவர் இன்று காலை சொந்த வேலை காரணமாக கொணலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சிறுகனூர் பிரிவு ரோட்டில் நடந்து சென்ற போது, சென்னையில் இருந்து  திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக கனகராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் விரைந்து சென்று கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுகனூர்  போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் அஸ்வினை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    திருவெண்ணைநல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குண்டல குழியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 34). விவசாயி.இவரது தங்கை வீடு திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பேரங்கியூரில் உள்ளது. நேற்று காலை முருகன் தனது தங்கை வீட்டுக்கு சென்று இருந்தார். இரவு 8 மணி அளவில் முருகன் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக அங்குள்ள பஸ் நிலையம் சென்று கொண்டிருந்தார்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று முருகன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அந்த கார் நிற்காமல் சென்று விட்டது.

    பலத்த காயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×